Sunday, October 3, 2010

தேடுகிறேன்….காணவில்லை!


அழிந்துபோன இரவுக்காகவா
இல்லை
பிறக்கப்போகும் புதுப்பகலுக்காவா
இத்தனை ஆர்ப்பாட்டம்
அந்த சந்தி வானிலே
பூமியும் கூட இருள் போர்வையகற்றி
இருந்து, எழமுயல்கின்றது
இன்னும் நான் தூங்குகின்றேன்
“இந்தா தம்பி டீ”
“எழும்பு பார்ப்பம்”
இன்னும் ஒலிக்கவில்லை 
அம்மாவின் சுப்ரபாதம்
எங்கே…
எங்கே…
தேடுகிறேன் 
காணவில்லை


என்னை புரிந்துகொண்ட
ஒரே ஒரு பெண்ணை…
உனை
தேடுகிறேன் காணவில்லை


அம்மா –பேனை – காவில்லை!
அம்மா – புத்தகம் - காணவில்லை!
அம்மா – பேசை – காணவில்லை!
அம்மா – சேட்டை – காவில்லை!


இத்தனை குரல்களும்
எதிரென ஒலிக்க
இன்று – அம்மா – காணவில்லை!!


வாசல் கடக்கும் அவசரத்தில்
வந்து மறிக்கும் 
ஒரு வார்த்தை


தம்பி ஐ.சி. எடுத்தியா?


இதுவும் இன்று காணவில்லை
இதையும் இன்று தேடுகின்றேன்


உணவின் பசியை மட்டும் அல்ல – என்
உணர்வின் பிணியையும் உணர்ந்தவளே
உந்தன் பாசம் எங்கேயம்மா?


உரிமை கொண்டு தேடுகின்றேன்
ஊரில் எங்கும் காணவில்லை.


உங்கள் உறவுகள் விட்டுப்போன
நினைவுகளைக்கொண்டு
உங்கள் உருவைத்தேடுகின்றேன்
உலகில் எங்கும் காணவில்லை.

சொல்லாமல் போனவளே…

.
சொல்லாமல்
போனவளே…
சொல்லிவிடு
“உன்னோடு எனக்கு 
ஓரிரண்டாண்டுகள் மட்டுமா
உறவு?

டுத்தெறிந்து விட்டு
சென்றவளே!
எப்படி முடிந்தது உன்னால்? ? ? ?
சொல்லாமற்போக….

கோடை புறப்படும்போது கூட
குளிர் இறங்கி…
கூப்பாடு போட்டுவிட்டுத்தான்..
செல்கின்றது.
ஆதவன்கூட 
மறைகையில் என்றும்
செங்கதிர் பரப்பி
செப்பியே செல்வான்
பூமியைவிட்டு
புறப்படும் நீயோ…
சொல்லாமற்போன சேதி தான் என்ன?

ன்னிடம் தானே 
கொடுத்துவைத்தேன்…
என் கோவக் கதிர் ஆற்றும்
குளத்தங்கரையை
உன்னிடம்தானே கொடுத்துவைத்தேன்…
என் பசியறிந்து பண்டமிடும்
பாத்திரத்தை

ன்னிடம் தானே 
கொடுத்துவைத்தேன்…
ஞான ஒளி கொடுக்கும்
நல்லறிவை
எப்படி நீ செல்வாய்?
என்னிடத்தில் சொல்லாமல்..
இத்தனையும் எடுத்துக்கொண்டு

சொல்லாமல்
போனவளே 
சோல்லிவிடு
“உன்னோடு எனக்கு
ஓரிரண்டு ஆண்டுகள் மட்டுமா
உறவு?

ஒரு நாள் - ஒரு இரவு


அந்த வைத்திய சாலையில்
வயோதிபப் பயத்துடன்
வாழ்க்கையை ஓட்டும்
நோயாளிகள் கூட்டத்தில் ஒருவராய் - அன்று
என் தந்தையும் இணைந்திருந்தார்.

பனிப் போர்வைக்குள் அவர்களின்
பக்குவமான தூக்கம்
பார்ப்பதற்கு அழகாய்….
நேர்த்தியாய்

வளர்ந்து வந்த என் கனவுகள்
வழுக்கி விழுந்ததில்
முளிப்பு
இதனால் என் தமிழில்
விளிப்பு

கடந்துபோன நேரப்பெண்ணை
கடத்திப்பார்க்க அன்று
ஆசை…

வைத்தியசாலைக் குறிப்பேட்டில்
உருவிக்கொண்ட
அந்த ஒற்றைத்தாளில்
ஒட்டுக்குடித்தனமாய்
என் கவிதைகள்!
புனிதமான பூக்களின் புராணம்
பாடுகின்றேன்.

“பூக்களே..!
உங்களைப்போல் பிறக்க மட்டுமல்ல
இறக்கவும் ஆசை”

“இனிமையாகப் பிறக்க மட்டுமல்ல
வேதனை இல்லாமல் இறக்கவும்தான்”

நேர முட்களை சுகம் விசாரிக்கின்றேன்
அவை – நள்ளிரவுதாண்டி 2.40

கவிதை குழந்தைகளில்க்கூட
சிலவரிகள் தான் கடைசிவரை
ஓட்டி உறவாடுகின்றது
அப்படியான வரிகளில் இதுவும் இணைகின்றது.

சூரியனை விட ஆறுதலாக
அக்காவை பார்க்கின்றேன்
அதிகாலை விடிவோடு
ஆள்மாறும்
ஏற்பாடு…

காலை கடக்கின்றது
இன்னும் காணவில்லை காரிகையை

நேரம்
ஏழடித்து ஓய
இனந்தெரிந்த
இரண்டு இன சனங்கள்
வருகை…
இவர்களுக்கு இப்படி ஒரு கடமை உணர்வா!
காலையே தந்தையை காணவரும் அவசரமா?
புரியாமல் புல்லரிக்கின்றேன்.

இருவரில் ஒருவர்
இந்திரன் மாமா
இதமாய் அழைத்து சொன்னார் சேதி
“அம்மாவுக்கும் எல்லோ
ஆஸ்மா கூடிட்டுது”

ஆடியே போட்டேன்
இருந்தும் விடவில்லை.

“அதுக்கு என்ன
ஆஸ்பத்திரியில் சேர்ப்போம்”

அவசரமாய்ப்புறப்பட்டேன்
அதைவிட அவசரமாய்
அவர் சொன்னார்
ஆள் Past (பாஸ்ட்)
ஆங்கிலம் எனக்கு புரிவதாக இல்லை
அதனது அர்த்தமும் விளங்கிவிடவில்லை.

“அதுக்கு என்ன
ஆஸ்பத்திரியில் சேர்ப்போம்”
மீண்டும் அதையே சொன்னேன்.

வாசல்வரை வந்தும் விட்டேன்
வரவேற்க அங்கே
அம்மா இல்லை.

எங்கே அம்மா?
எங்கே
என்னைக் கண்டும்?
இன்னும் தூக்கமா?
எப்படி அம்மா
உன்னால் முடியும்
………………….
………………….
………………….
(இவ் உணர்வுக்கு
இன்னும் என் அகராதியில் வார்த்தை இல்லை)
அழுகையில் புதைந்து அக்கா வந்தா
………………….
………………….
………………….

தம்பி!
2.40 இருக்கும் அம்மா!
பூவைப்போல உதிர்ந்துதான் போன “புண்ணியமான நல்ல சாவு”
யாரோ பாட்டி நழுவலாய் சொன்னார்.
…………………
…………………
…………………

இன்றும் நினைக்கின்றேன்…
என் கடைசித் துருப்புச்சீட்டும்
எனைக் கைவிட்டுச்சென்ற அந்த
ஒரு நாள் ஒரு இரவை.

ஓன்று மட்டும் நிச்சயம்
கவிதை
நினைத்தால் வருவதல்ல
நெஞ்சம்
கனத்தால் வருவது.
கவிதை
அறிவுபூர்வமானது
மட்டும் அல்ல
உணர்வுபூர்வமானதும் கூட.

இதனால்……
இத்துடன் நிறுத்தி விடுகின்றேன்
என் கவிதைகளை
ஏன் எனில்
என்
உணர்வுகள் தொலைந்த பின்னும்
எழுதுதல்
உத்தமமானதாய் எனக்கு படவில்லை
இதுதான் என் இறுதி…
கவிதாஞ்சலி.

Friday, September 24, 2010

சூழலுக்காய் ஓர் எழுச்சி


விண்ணுக்குச் சென்றவர்கள் விட்டெறிந்த குப்பையெல்லாம்
மண்ணிற்கு படையெடுத்து மண்டலத்தை சுத்துதடா!
புண்ணுக்கு மருந்தடிக்க புகைபோக்கி இருந்தடிக்க
எண்ணத்து களங்கம்போல் இவ்வுலகில் குப்பையடா!

நகரம் என்றதும் நாறிடுங் கூவங்கள்
தகரம் எங்கணும் பங்கிடுஞ் சாதங்கள்
சிகரம் சிந்திடும் சிகரத்தின் சாரல்கள்
அகரம் என்பதற்குள் ஆர் உயிர்போகுமோ?

மைவழியாள் ‘சென்ரடிக்க’ மாப்பிள்ளைமார் காடழிக்க
பைவழியே பாலனுப்ப பாதரசம் சேர்ந்திருக்க
கைநழுவிப் போகுதடா! காடுகளும் வேகுதடா!
தையலவள் வெளிரிடையாய் தாஜ்மஹாலும் ஆனதடா!

இன்னொரு உலகம் உண்டோ சொல்
இருப்பதை கெடுப்பது முறையோ சொல்
விண்வெளி உனக்கு விருந்தோ சொல்
உன்னிடம் காத்திட உழைத்தே நில்.

சஞ்சீவிக்காக -13.12.1997

சாதனை ஓட்டம்!


சாதனையோட்டமிது; இவ்வுலகின்
  வேதனை யோட்டமிது!
போதனை யோட்டமிது;  பொய்யுலகின்
  பெரும்புகழ் ஓட்டமிது.

தீவிலிருந்து புறப்பட்டு
  திரண்டு யாழாலோடி
நாவில் தண்ணியற்று
  நாள்பல கிடந்துண்டு
சாவின் வழிம்பு என்று
  சாவகச் சேரி சேர்ந்து
ஏதும் உடமை யற்று
   எங்கெங்கே அலைந்திருந்தோம்.

பாவியெம் பழி துறந்து
  பாய்ந்தோடித் தோணி ஏறி
வன்னிக்காட்டு வனாந்தரங்கள்
   வளர்ந்த நல் மரங்கள் தாண்டி
பூவாசம் கிடைக்கும் என்று
   ‘பூந்தோட்ட’ முகாம் சென்றோம்.
நாய் வேச மென்னவென்று
   நல்லாய்த் தெரிந்துகொண்டோம்.

இது தான் நிலையென்றும்
  இன்னுமெம் முயிர் பிடித்து
ஊர் வாசம் காணவென்று
உலகெல்லாம் ஓடுகின்றோம்.

1996இல் எழுதிய ஒரு கவிதை