விண்ணுக்குச் சென்றவர்கள் விட்டெறிந்த குப்பையெல்லாம்
மண்ணிற்கு படையெடுத்து மண்டலத்தை சுத்துதடா!
புண்ணுக்கு மருந்தடிக்க புகைபோக்கி இருந்தடிக்க
எண்ணத்து களங்கம்போல் இவ்வுலகில் குப்பையடா!
நகரம் என்றதும் நாறிடுங் கூவங்கள்
தகரம் எங்கணும் பங்கிடுஞ் சாதங்கள்
சிகரம் சிந்திடும் சிகரத்தின் சாரல்கள்
அகரம் என்பதற்குள் ஆர் உயிர்போகுமோ?
மைவழியாள் ‘சென்ரடிக்க’ மாப்பிள்ளைமார் காடழிக்க
பைவழியே பாலனுப்ப பாதரசம் சேர்ந்திருக்க
கைநழுவிப் போகுதடா! காடுகளும் வேகுதடா!
தையலவள் வெளிரிடையாய் தாஜ்மஹாலும் ஆனதடா!
இன்னொரு உலகம் உண்டோ சொல்
இருப்பதை கெடுப்பது முறையோ சொல்
விண்வெளி உனக்கு விருந்தோ சொல்
உன்னிடம் காத்திட உழைத்தே நில்.
சஞ்சீவிக்காக -13.12.1997